[நேர்காணல்] (தமிழில்) மறைந்த காயல்பட்டினம் வரலாற்று ஆசிரியர் ஹாஜி RS அப்துல் லத்தீப் உடன் 2007 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட நேர்காணல்!

காயல்பட்டினம் வரலாறு குறித்து பல்வேறு புத்தகங்கள் எழுதியுள்ள - ஹாஜி RS அப்துல் லத்தீப் உடன் kayalpatnam.com இணையதளம், 2007 ஆம் ஆண்டு (நவம்பர் 1) விரிவான நேர்காணல் நடத்தியது. ( https://web.archive.org/web/20081006144033/www.kayalpatnam.com/interviews-abdullatiff-011107.asp ). அந்த நேர்காணலின் ஆங்கில வடிவம் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் தமிழாக்கம் - கீழே. Kayalpatnam.com> காயல்பட்டினத்தின் வரலாறு குறித்து சில புத்தகங்களை எழுதியிருக்கிறீர்கள். அந்தப் புத்தகங்களைப் பற்றிச் சொல்லுங்கள். Dr.R.S.Abdul Latiff> தமிழில் மூன்று புத்தகங்களும் ஆங்கிலத்தில் ஒரு புத்தகமும் எழுதினேன். தமிழில் எழுதப்பட்ட நூல்கள் - காயலின் இறைநேசர்கள் (1992), காயல்பட்டினம் (1993), காயல்பட்டினத்தின் வரலாற்றுச் சுருக்கமும், தலைமுறையும் (1998) மற்றும் ஆங்கிலத்தில் Concise history of Kayalpatnam (2004). Kayalpatnam.com>இந்த துறையில் உங்களுக்கு எப்படி ஆர்வம் வந்தது? Dr.R.S.Abdul Latiff> 1981 ஆம் ஆண்டு கீழக்கரையைச் சேர்ந்த திரு.M.இத்ரீஸ் மரிக்கார் அவர்கள் ஒரு புத்தகத்தை எழுதியிருந்தார் - 'தமிழக...