Posts

Showing posts from January, 2023

[நேர்காணல்] (தமிழில்) மறைந்த காயல்பட்டினம் வரலாற்று ஆசிரியர் ஹாஜி RS அப்துல் லத்தீப் உடன் 2007 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட நேர்காணல்!

Image
  காயல்பட்டினம் வரலாறு குறித்து பல்வேறு புத்தகங்கள் எழுதியுள்ள - ஹாஜி RS அப்துல் லத்தீப் உடன் kayalpatnam.com  இணையதளம், 2007 ஆம் ஆண்டு (நவம்பர் 1) விரிவான நேர்காணல் நடத்தியது. ( https://web.archive.org/web/20081006144033/www.kayalpatnam.com/interviews-abdullatiff-011107.asp ). அந்த நேர்காணலின் ஆங்கில வடிவம் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் தமிழாக்கம் - கீழே. Kayalpatnam.com> காயல்பட்டினத்தின் வரலாறு குறித்து சில புத்தகங்களை எழுதியிருக்கிறீர்கள். அந்தப் புத்தகங்களைப் பற்றிச் சொல்லுங்கள். Dr.R.S.Abdul Latiff> தமிழில் மூன்று புத்தகங்களும் ஆங்கிலத்தில் ஒரு புத்தகமும் எழுதினேன். தமிழில் எழுதப்பட்ட நூல்கள் - காயலின் இறைநேசர்கள் (1992), காயல்பட்டினம் (1993), காயல்பட்டினத்தின் வரலாற்றுச் சுருக்கமும், தலைமுறையும் (1998) மற்றும் ஆங்கிலத்தில் Concise history of Kayalpatnam (2004). Kayalpatnam.com>இந்த துறையில் உங்களுக்கு எப்படி ஆர்வம் வந்தது? Dr.R.S.Abdul Latiff> 1981 ஆம் ஆண்டு கீழக்கரையைச் சேர்ந்த திரு.M.இத்ரீஸ் மரிக்கார் அவர்கள் ஒரு புத்தகத்தை எழுதியிருந்தார் - 'தமிழக...

[Interview] (ஆங்கிலத்தில்) மறைந்த காயல்பட்டினம் வரலாற்று ஆசிரியர் ஹாஜி RS அப்துல் லத்தீப் உடன் 2007 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட நேர்காணல்!

Image
 சமீப காலங்களில் நடந்தேறிய நிகழ்வுகள் குறித்த செய்திகளிலேயே அது இப்படி நடக்கவில்லை, இல்லை இப்படித்தான் நடந்தது என பல்வேறு கருத்து வேறுபாடுகளுக்கு இடம் உள்ளது என நாம் அறிவோம். அதுவும் தொழில்நுட்பம் பெரிய அளவில் வளர்ந்துள்ள காலசூழல் தற்போது நிலவும் போது கூட! அப்படி என்றால் - பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக நடந்ததாக கூறப்படும் செய்திகளின் உண்மைத்தன்மையை நாம் எப்படி அறிந்துக்கொள்வது? கடந்த கால நிகழ்வுகளை வரலாற்று ஆசிரியர்கள் - கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகள், கல்லறை குறிப்புகள், ஓலைகள், சமகால புத்தகங்கள் போன்ற ஆவணங்கள் மூலம் - எழுதுவார்கள். காயல்பட்டினம் வரலாறாக - மக்களால் நம்பப்படும் செய்திகள், புத்தகங்களில் வெளிவந்துள்ள தகவல்கள் எவ்வளவு தூரம் - உண்மையானவை, ஆதாரங்கள் அடிப்படையிலானாவை? காயல்பட்டினம் வரலாறு குறித்து பல்வேறு புத்தகங்கள் எழுதியுள்ள - ஹாஜி RS அப்துல் லத்தீப் உடன் kayalpatnam.com  இணையதளம், 2007 ஆம் ஆண்டு (நவம்பர் 1) விரிவான நேர்காணல் நடத்தியது. ( https://web.archive.org/web/20081006144033/www.kayalpatnam.com/interviews-abdullatiff-011107.asp ) அந்த நேர்காணல் விபரங்கள் - கீ...

(தமிழில்) ஹாஜி RS அப்துல் லத்தீப் எழுதிய காயல்பட்டினத்தின் சுருக்கமான வரலாறு!

Image
காயல்பட்டினத்தின் சுருக்கமான வரலாறு டாக்டர் ஆர்.எஸ். அப்துல் லத்தீஃப் எம்.ஏ.டி.லிட். [ஆங்கிலத்தில் CONCISE HISTORY OF KAYALPATNAM என்ற பெயரில் வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கம்) காயல்பட்டினம் இந்தியாவின் பழமையான வரலாற்று நகரமாகும். இது இந்திய தீபகற்பத்தின் தென்கிழக்கு பகுதியில், வங்காள விரிகுடாவின் கரையில் அமைந்துள்ளது. இது தூத்துக்குடி மாவட்டத்தில் (முன்பு திருநெல்வேலி மாவட்டத்தில்) அமைந்துள்ள ஒரு முஸ்லிம் பெரும்பான்மை நகரம் ஆகும். இது சென்னையிலிருந்து 400 மைல் தொலைவிலும், திருவனந்தபுரம் மற்றும் மதுரையிலிருந்து 100 மைல் தொலைவிலும் அமைந்துள்ளது.  இசுலாமியத்தின் வருகைக்கு முன்பே காயல்பட்டணம் ஒரு முக்கியமான வர்த்தக மையமாக இருந்தது மற்றும் அரேபியர்களும் கிரேக்கர்களும் அடிக்கடி வருகை தரும் மாபார் துறைமுகமாக இது இருந்தது. நமது அன்புக்குரிய இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்நாளில், இஸ்லாத்தின் அமைதிப் பணியைப் போதிக்க இஸ்லாமிய மிஷனரிகள் மாபருக்கு அனுப்பப்பட்டனர். காயல்பட்டினத்தில் முதல் குடியேற்றம் கிபி 633 இல் (ஹிஜிரி 12) ஏற்பட்டது. முதன்முதலில் குடியேறியவர்கள் மக்கா மற்றும் மதீனாவில...

(ஆங்கிலத்தில்) ஹாஜி RS அப்துல் லத்தீப் எழுதிய CONCISE HISTORY OF KAYALPATNAM!

Image
 சமீப காலத்தில், காயல்பட்டினம் வரலாறு குறித்து புத்தகங்களை எழுதியவர்களில் முக்கியமானவர் மறைந்த ஹாஜி RS அப்துல் லத்தீப் அவர்கள் ஆவார்.  தமிழில் மூன்று புத்தகங்களும், ஆங்கிலத்தில் ஒரு புத்தகமும் இவர் எழுதியுள்ளார். அவை - காயலின் இறைநேசர்கள் (1992), காயல்பட்டினம் (1993), காயல்பட்டினத்தின் வரலாற்று சுருக்கமும், தலைமுறையும் (1998) & Concise History of Kayalpatnam (2004). இவர் எழுதிய - காயல்பட்டணத்தின் சுருக்கமான வரலாறு (Concise History of Kayalpatnam), நகரின் வரலாறு குறித்து ஆர்வமான வினாக்கள் எழும்போது எல்லாம், பகிரப்படுவது உண்டு.  2001 ஆம் ஆண்டு, kayalpatnam.com இணையதளத்தில் கட்டுரை வடிவத்தில் ( https://web.archive.org/web/20010917131114/http://kayalpatnam.com/concise.htm ) இடம்பெற்ற ஹாஜி RS அப்துல் லத்தீப் உடைய  Concise History of Kayalpatnam - மீண்டும்  முழுமையாக, முதலில் ஆங்கிலத்தில் இந்த பதிவிலும், தொடர்ந்து தமிழில் அடுத்த பதிவில் - வழங்கப்படுகிறது. Concise History of Kayalpatnam By Dr. R.S. Abdul Latiff M.A.D.Litt. Kayalpatnam is an ancient historical city ...

ஆவணங்கள் / ஆதாரங்கள் அடிப்படையிலான காயல் வரலாற்று பயணம்!

Image
தமிழ் நாட்டின், தென்கோடியில், தற்போதைய தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள காயல்பட்டினம் / காயல்பட்டணம் - பல நூறு ஆண்டுகள் வரலாற்றினை கொண்ட நகரமாகும். இவ்வூரின் வரலாற்றினை, குறிப்பாக இஸ்லாமியர் குடியமர்வு முதலான வரலாற்றினை  ஆவணப்படுத்த, பல்வேறு முயற்சிகள் கடந்த காலங்களில் எடுக்கப்பட்டுள்ளது. 19ஆம் நூற்றாண்டிலும், 20ஆம் நூற்றாண்டிலும் சில புத்தகங்களும் - உள்ளூர் வரலாற்று ஆர்வலர்களால், வெளியிடப்பட்டுள்ளன.  பல சுவாரசியமான செய்திகளை அந்த வரலாற்று நூற்கள் தெரிவித்தாலும், காயல்பட்டினம் / காயல்பட்டணம் வரலாறு - ஒரு முழுமையான செய்தியாக, தகவலாக, ஏற்றுக்கொள்ள கூடிய ஆதாரங்களுடன் -  இன்னும் சமுதாயம் முன்பாக கொண்டு வரப்படவில்லை என்பதே உண்மை. காயல்பட்டினம் (இஸ்லாமிய குடியிருப்பு) வரலாறு எடுத்துரைக்கும் பலர் - மிகவும் எளிதாக, இஸ்லாம் தோன்றிய காலத்தில் இருந்தே - காயலில் இஸ்லாம் உள்ளது போன்ற கூற்றுகளை வைக்கிறார்கள். இது உண்மையாக இருக்கலாம்.   ஆனால் இதனை நிறுவ ஆவணங்கள் அடிப்படையிலான ஆதாரங்கள் இல்லை என்ற தற்போதைய நிலையில், இது மிகைப்படுத்தப்பட்ட கூற்றாகவும்  இருக்கலாம் என ஏற்...